Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவில் நிமோனியா பாதிப்பு.. மருத்துவமனைகளில் குவியும் குழந்தைகளால் பரபரப்பு..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:08 IST)
சீனாவில் நிமோனியா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் குழந்தைகள் அதிக அளவு அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் தற்போது சீனாவில் நிமோனியா காய்ச்சல் ஆட்டிப்படைத்து வருகிறது,. பெரும்பாலும் குழந்தைகள் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் சீன அரசு இதை தடுப்பது எப்படி என்று தெரியாமல் திணறி வருகிறது.

கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்போதும் விதிக்கப்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே பொதுமக்கள் முடங்கியுள்ளனர். மாணவர்கள் ஆன்லைனில் தான் பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிமோனியா காய்ச்சல் பெரும்பாலும் குழந்தைகளை தாக்குவதால் சீன மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வருவதாகவும் குழந்தைகள் ஒரு சில நாட்கள் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சீனாவின் பெரும்பாலான பகுதிகளை பள்ளிகள் மூடப்பட்டு தற்போது ஆன்லைன் வகுப்பில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மருத்துவமனை வளாகங்களில் ஹோம் ஒர்க் அறை என்று ஒதுக்கப்பட்டு ஆசிரியர்கள் வழிகாட்டுதலோடு அங்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் சார்ஜ் போட்டபோது ஷாக்.. சென்னை பள்ளி மாணவி பரிதாப பலி..!

சிறையில் தீட்டப்பட்ட சதி.. தடுக்க முடியாமல் குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு.. அன்புமணி

எந்த தமிழனும் தமிழ்நாட்டை உருவாக்கல.. RSS தேசபக்தர்களை உருவாக்கியது! - மகாராஷ்டிர ஆளுநர் சர்ச்சை பேச்சு!

அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் ஏஐ பாடத்திட்டம்: பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்

கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியை ஸ்டாலின் இழந்து விட்டார் : ஆசிரியர் கூட்டமைப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments