Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பன் கடற்கரை, தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: மாவட்ட நிர்வாகம்..!

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (08:02 IST)
வங்கக் கடலில் புயல் சின்னம் தோன்றியுள்ளதை அடுத்து பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் தோன்றியுள்ள புயல் சின்னம் டிசம்பர் மூன்றாம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மிக கனமழை மற்றும் சூறைக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயல் சின்னம் காரணமாக பாம்பன் கடற்கரை மற்றும் தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்றும் எனவே அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே எட்டாவது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஸ்டடி மரணம்.. திமுக அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! - தவெக விஜய் எச்சரிக்கை!

வழுக்கி விழுந்து வலிப்பு வந்து..! பூ சுற்றும் FIR? 5 காவலர்கள் கைது! - சிவகங்கை கஸ்டடி மரணம்!

70 வயது மூதாட்டியை மரத்தில் கட்டி வைத்த பக்கத்து வீட்டு கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்..!

தானம் செய்யப்பட்ட பெட்டியில் இருந்து ஆடையை எடுக்க முயன்ற பெண் பரிதாப பலி.. என்ன நடந்தது?

அரசு அதிகாரியை அலுவலகத்தில் இருந்து வெளியே இழுத்து வந்து தாக்கிய பாஜக பிரமுகர்.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments