Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைஜீரியா தேவாலயத்தில் கொடூர துப்பாக்கிச்சூடு! – 50 பேர் பரிதாப பலி!

Webdunia
திங்கள், 6 ஜூன் 2022 (09:43 IST)
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நைஜீரியாவின் தேவாலயத்தில் கொடூரமான துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

சமீபகாலமாக உலகளவில் நடந்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்கள் முன்னதாக பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பல குழந்தைகள் பலியான சம்பவம் துப்பாக்கி கலாச்சாரம் மீதான பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர். மேலும் கையெறி குண்டுகளையும் வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் 22 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த 70 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் பலர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments