Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடாது கருப்பாய் துரத்தும் கொரோனா! – மீண்டும் பாதிக்கப்பட்ட நியூஸிலாந்து!

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2020 (11:16 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள சூழலில் கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. குறைவான மக்கள் தொகை கொண்ட நியூஸிலாந்தும் கொரோனாவுக்கு தப்பவில்லை. 16 லட்சம் மக்கள் வாழும் நியூஸிலாந்தில் கொரோனாவால் 1,156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் உயிரிழந்தனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்தது.

அதை தொடர்ந்து கொரோனா இல்லாத நாடாக நியூஸிலாந்தை அறிவித்த அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் ஊரடங்கை நீக்கி பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தார். கடந்த 25 நாட்களாக அங்கு எதுவும் புது தொற்றுகள் இல்லாமல் இருந்த நிலையில் இன்று நியூஸிலாந்தில் புதிதாக இரு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவர்கள் இருவரும் பிரிட்டனுக்கு சென்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments