Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாயை விட மனிதனுக்கே மோப்ப சக்தி அதிகம்: புதிய ஆய்வு

நாயை விட மனிதனுக்கே மோப்ப சக்தி அதிகம்: புதிய ஆய்வு
, சனி, 13 மே 2017 (15:19 IST)
நாய், சுண்டெலி, போன்ற விலங்குகளை விட மனிதர்களுக்கே மோப்ப சக்தி என புதிய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.


 

 
அமெரிக்கா மியாமியில் உள்ள ரட்சர்ஸ் பல்கலைக்கழக நரம்பியல் விஞ்ஞானி ஜான் பி மெக்கன் என்பவர் மோப்ப சக்தி குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். அந்த ஆய்வில் நாய், சுண்டெலி, சுறா உள்ளிட மற்ற விலங்குகளை விட மனிதர்களுக்கே மோப்ப சக்தி அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.
 
மனிதர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசனைகளை நுகர்ந்து அவை எவை என கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு குறித்த தகவல்கள் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. 
 
மேலும் 1879ஆம் ஆண்டு விஞ்ஞானி புரோகா என்பவர் விலங்குகளை விட மனிதர்களுக்கு மோப்ப சக்தி குறைவு என ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உறவுக்கு அழைத்த 70 வயது கணவரை வெட்டி கொலை செய்த மனைவி