Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாள அதிபர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (22:15 IST)
நேபாள நாட்டில் பிரதமர் புஷ்பா கலம் தாஹல் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் அதிபர் ராம்சந்திர பவுதல் (71) சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி திடீர் வயிற்று வலிகாரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் உடல் நலக்குறைவால் ராம்சந்திர பவுதல் பாதிக்கப்பட்ட  நிலையில், குடும்பத்தினர் அவரை தலைநகர் காத்மண்டுவில் உள்ள   டியூ மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

எனவே, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, இன்று காலை அவர் ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு  அனுப்பிவைக்கப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments