Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேபாளத்தில் நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் இடிந்து 6 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 9 நவம்பர் 2022 (07:59 IST)
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நேற்று நள்ளிரவு திடீரென பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் நேற்று நள்ளிரவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
நேபாளத்தில் உள்ள டோட்டி என்ற மாவட்டத்தில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதில் வீடு இடிந்து விழுந்து 6 பேர் வரை உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
மேலும் இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து விரைவில் தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டெல்லியிலும் சுமார் 15 விநாடிகள் நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments