Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”செவ்வாயில் தண்ணீர் இருக்கிறது”.. நாசா தகவல்

Arun Prasath
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (14:48 IST)
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறது என நாசா அதிகாரபூர்வமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சூரிய குடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளோ அல்லது மனிதர்கள் வாழ்வதற்கான அடிப்படை விஷயங்கள் இருக்கிறதா? என பல ஆண்டுகளாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கான பண்புகள் உள்ளன என அவ்வப்போது தகவல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் பனி நீர் இருப்பதாக ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் பூமிக்கு 2.5 சென்டிமீட்டர் ஆழத்தில் பனி இருப்பதாகவும், இது பிற்காலத்தில் வெளியே தெரிய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments