Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 கிராம மக்களை உயிரோடு எரித்த ராணுவம்! – மியான்மரில் வெறிச்செயல்!

11 கிராம மக்களை உயிரோடு எரித்த ராணுவம்! – மியான்மரில் வெறிச்செயல்!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (12:41 IST)
மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் கிராம மக்கள் 11 பேரை எரித்துக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் மக்களால் அமைக்கப்பட்ட ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது,. அதை தொடர்ந்து ராணுவ ஆட்சிக்கு எதிராக பலரும் போராடி வரும் நிலையில் தேசத் தலைவர்களை சிறை வைத்துள்ள ராணுவம், மக்கள் மீது அடக்குமுறையையும் ஏவி வருகிறது.

இந்நிலையில் மியான்மரி வடமேற்கு பகுதியில் மொனிவா நகரில் ராணுவம் அணிவகுத்து சென்றபோது சிலர் அணிவகுப்பு மீது கையெறி குண்டுகளை வீசியுள்ளனர். அதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கிராமத்திற்குள் புகுந்த ராணுவத்தினர் அங்கிருந்து 11 பேரை பிடித்து உயிரோடு எரித்துக் கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ராணுவம் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுகவை கண்டித்து போராட்டம்; தேதி ஒத்திவைப்பு! – அதிமுக அறிவிப்பு!