Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்திற்கு எதிராக புரட்சி; துண்டிக்கப்பட்ட இணைய சேவை! – என்ன நடக்கிறது மியான்மரில்?

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (09:27 IST)
மியான்மரில் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கடந்த நவம்பரில் நடந்த மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம் சாட்டிய ராணுவம் ஜனநாயக கட்சி முக்கிய தலைவர்களை கைது செய்துள்ளதுடன், மியான்மரில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியுள்ளது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வீதிகளில் போராட்டம் நடத்த தொடங்கியுள்ள நிலையில் மக்கள் போராட்டத்தை ஒடுக்க ஆயுதமேந்திய போர் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதலாக மியான்மரின் பல பகுதிகளிலும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

மியான்மரில் நடந்து வரும் இந்த அதிகார மீறலான ராணுவ ஆட்சியை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளும், ஐ.நா சபையும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments