Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோண்ட தோண்ட கிடைக்கும் உடல்கள்: அதிர்ச்சியை ஏற்படுத்தும் மர்மம்

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (15:49 IST)
மெக்சிகோவில் உள்ள வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
போதை பொருட்களை கடத்துவதற்கு பல வருடங்களாக மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
கடந்த 2017 ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்த குறிப்பிட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது குவியலாக குறிப்பிட்ட இடத்தில் இருந்து உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருகிறது. 
 
பாதுகாப்பு காரணங்களை கருதி போலீஸார் அந்த இடத்தின் பெயரை வெளியிட மறுத்துவிட்டனர். அதோடு, உடல்கல் கிடைத்த இடத்தில் இருந்து உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
மெக்சிகோவை பொறுத்தவரை போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதனால் அங்கு எழும் தொழில் போட்டியை சமாளிக்க கொலைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது.
 
கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம் பேர் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments