Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை... பதற்றம் அதிகரிப்பு !

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை... பதற்றம் அதிகரிப்பு !
, ஞாயிறு, 5 ஜனவரி 2020 (16:49 IST)
பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து  ஏற்படுத்திய நிலையில் இன்று (ஜனவரி 5 ஆம் நாள்) பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட சம்பவம் இருநாடுகள் இடையே பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் நங்கனா சாகிப்பில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலம் உள்ளது. இதில், குருத்வாரா மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தினார். அதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இந்த நிலையில், பெஷாவரின் ஒரு சீக்கிய இளைஞரை மர்ம நபர்கள் கொலை செய்தனர். இதனையடுத்து சம்கனி போலீஸ் ஸ்டேசனுக்கு உட்பட்ட பகுதியில் அந்த இளைஞரின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பட்டது.
 
இதுகுறித்து போலீஸார்  விசாரணை மேற்கொண்டனர். இதில், கொலை செய்யப்பட்ட நபர் ரவுந்தர் சிங்.அவரை சிலர் அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் கொலை செய்த குற்றவளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீரில் செல்லும் பைக் ... இளைஞர்களின் வித்தியாசமான யோசனை ! வைரல் வீடியோ !