Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு சிறை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:25 IST)
தீப்பிடித்து எரியும் வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றிய தாயாரை வட கொரிய அரசு சிறையில் அடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகொரிய நாட்டில் வட ஹேம்ஹாங் என்ற மாகாணத்தில் கடந்த 30ஆம் தேதி திடீரென இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தன்னுடைய குழந்தை அந்த வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பதை அறிந்த தாயார் உடனடியாக ரிஸ்க் எடுத்து வீட்டின் உள்ளே போய் குழந்தைகளை காப்பாற்றினார். அந்த குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன 
 
இந்த நிலையில் வடகொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த புகைப்படம் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது விசாரணையில் தெரியவந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும் புகைப்படத்துக்கு சேதம் ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்படுவது வட கொரியா நாட்டின் சட்டம். அதன்படி குழந்தையை காப்பாற்றிய அந்த தாயார் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments