Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு சிறை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:25 IST)
தீப்பிடித்து எரியும் வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றிய தாயாரை வட கொரிய அரசு சிறையில் அடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகொரிய நாட்டில் வட ஹேம்ஹாங் என்ற மாகாணத்தில் கடந்த 30ஆம் தேதி திடீரென இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தன்னுடைய குழந்தை அந்த வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பதை அறிந்த தாயார் உடனடியாக ரிஸ்க் எடுத்து வீட்டின் உள்ளே போய் குழந்தைகளை காப்பாற்றினார். அந்த குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன 
 
இந்த நிலையில் வடகொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த புகைப்படம் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது விசாரணையில் தெரியவந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும் புகைப்படத்துக்கு சேதம் ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்படுவது வட கொரியா நாட்டின் சட்டம். அதன்படி குழந்தையை காப்பாற்றிய அந்த தாயார் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments