Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எரியும் வீட்டில் இருந்து குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு சிறை: அதிர்ச்சி தகவல்

Webdunia
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (15:25 IST)
தீப்பிடித்து எரியும் வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகளை காப்பாற்றிய தாயாரை வட கொரிய அரசு சிறையில் அடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகொரிய நாட்டில் வட ஹேம்ஹாங் என்ற மாகாணத்தில் கடந்த 30ஆம் தேதி திடீரென இரண்டு வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தன்னுடைய குழந்தை அந்த வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருப்பதை அறிந்த தாயார் உடனடியாக ரிஸ்க் எடுத்து வீட்டின் உள்ளே போய் குழந்தைகளை காப்பாற்றினார். அந்த குழந்தையை காப்பாற்றிய தாயாருக்கு பாராட்டுக்கள் குவிந்தன 
 
இந்த நிலையில் வடகொரியாவின் ஒவ்வொரு வீட்டிலும் அதிபர் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த புகைப்படம் இந்த தீ விபத்தில் எரிந்து சாம்பலானது விசாரணையில் தெரியவந்தது. ஒவ்வொரு வீட்டிலும் வைத்திருக்கும் புகைப்படத்துக்கு சேதம் ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்படுவது வட கொரியா நாட்டின் சட்டம். அதன்படி குழந்தையை காப்பாற்றிய அந்த தாயார் புகைப்படத்தை ஏன் காப்பாற்றவில்லை என்று கூறி கைது செய்யப்பட்டார். அவர் மீது விசாரணை நடந்து வருகிறது. அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

’மெர்சல்’ நாயகனுடன் ஜல்லிக்கட்டு நாயகர்? தவெக - ஓபிஎஸ் கூட்டணி? - பண்ருட்டி ராமச்சந்திரன் ஓபன் டாக்!

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments