Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

11 நாள் மோதலில் பலியான உயிர்கள் 257… 8538 பேர் காயம்!

11 நாள் மோதலில் பலியான உயிர்கள் 257… 8538 பேர் காயம்!
, சனி, 22 மே 2021 (08:59 IST)
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு எதிரான 11நாள் சண்டை நேற்றோடு முடிவுக்கு வந்தது.

இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்திற்கு இடையே கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்து மோதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த சண்டை நிறுத்தம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வரும். மோதல் முடிவுக்கு வந்தவுடன் பாலத்தீன மக்கள் காசாவின் சாலைகளுக்கு வந்து "இறைவன் சிறப்பானவர், இறைவனுக்கு நன்றி" என கோஷம் எழுப்பினர்.

இந்த சண்டையில் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் ஆயுதக் குழு என இரு தரப்புமே தாங்கள் வெற்றி பெற்றதாக அறிவித்து கொண்டன. இந்த சண்டை நிறுத்தத்துக்கு அண்டை நாடான எகிப்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 11 நாட்கள் நடந்த தாக்குதலில் இரு தரப்பிலும் சேர்த்து 257 பேர் பலியாகியுள்ளனர். அதில் குழந்தைகள் மட்டும் 80 பேருக்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த போரில் 8538 பேர் காயமடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் -க்கு அரசு பங்களா, ஓபிஎஸ்-க்கு காலி செய்ய கால அவகாசம்!