Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஸ்ரேல் பயணம்: மோடி தங்கிய அறையின் வாடகை ரூ.1 கோடி

இஸ்ரேல் பயணம்: மோடி தங்கிய அறையின் வாடகை ரூ.1 கோடி
, புதன், 5 ஜூலை 2017 (23:31 IST)
பாரத பிரதமர் நரேந்திரமோடி மூன்று நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். இஸ்ரேலுக்கு வரும் முதல் இந்திய பிரதமர் என்பதால் அவருக்கு பல அடுக்கு பாதுகாப்பை இஸ்ரேல் அரசு செய்துள்ளது.



 
 
குறிப்பாக பிரதமர் மோடி தங்கியுள்ள கிங் டேவிட் ஹோட்டலில் உள்ள ஒரு அறைக்கு ஒருநாள் வாடகை ரூ.1 கோடியாம். வெடிகுண்டு தாக்குதல் ,ரசாயன தாக்குதல் உள்ளிட்ட எந்த தாக்குதலுக்கும் இந்த அறையை அசைக்க முடியாதாம். 
 
உலகின் மிக பாதுகாப்பான அறை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த அறையில் மோடி சகல வசதிகளுடன் தங்கியுள்ளார். மேலும் இந்த அறையில் தாக்குதல் நேரத்தில் தப்பிக்கும் வகையில் சுரங்க பாதையும், அதி நவீன தொழில்நுட்பங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் மோடி சைவ உணவு பிரியர் என்பதால் அவருக்கான பிரத்யோக உணவுகள் அந்த ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஷால் பாணியில் வாலண்டியராக வந்து மாட்டிய சேரன்