Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் முறையாக செல்போனில் இண்டர்நெட்; மகிழ்ச்சியில் கியூபா

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (15:19 IST)
கியூபா நாட்டில் முதல் முறையாக செல்போனில் இணையதளம் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

 
50 ஆண்டு கால இணைய வரலாற்றில் கியூபாவில் முதன் முறையாக செல்போனில் இன்டர்நெட் பயன் படுத்தும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவில் கண் மூடி தூங்கும் வரை எப்போதும் 4ஜி வேகத்தில் செல்போனில் இன்டர் நெட் பார்க்கும் இந்தியர்களுக்கு இது ஆச்சரியமான வி‌ஷயமாக இருக்கலாம்.
 
பல்வேறு துறைகளில் கியூபா முன்னேற்றங்களை கண்டிருக்கும் கியூபா இப்போதுதான் முழு இணைய சேவை வசதியை பெற உள்ளது. அமெரிக்காவை விட பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்த கியூபா சோவியத் ரஷியா உடைந்த பின் பெரிய பாதிப்பை சந்தித்தது. 
 
அமெரிக்காவின் கெடுபிடியால் கியூபா இன்னும் பெரிய மாற்றங்களை சந்திக்காமல் உள்ளது. தற்போது கியூபாவில் 2ஜி நெட்வொர்க் மட்டுமே உள்ளது. அந்த நெட்வொர்க்கும் கூட அரசு வழங்கும் பொது வைபை மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும்.
 
தொலை தொடர்பு சாதனங்களை விற்க அமெரிக்கா கடும் கட்டுப்பாடு விதித்துள்ள காரணத்தினால் அங்கு உலகின் பெரிய மொபைல் நெட்வொர்க்குகள் எதுவும் கிடையாது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments