Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாக்கடைக்குள்ளிருந்து வந்த ராட்சச எலி; அறண்டு போன ஊழியர்கள்! – கடைசியா பாத்தா..?

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (09:38 IST)
மெக்ஸிகோவில் சாக்கடை சுத்தம் செய்யும்போது முதலை சைஸில் எலி ஒன்றை கண்டு பயந்த ஊழியர்கள் உற்று பார்த்ததும் உண்மை தெரிந்து மன அமைதி அடைந்துள்ளனர்.

மெக்ஸிகோவின் நகரமொன்றில் சாக்கடை பழுதுபட்டதால் அதை சுத்தம் செய்யும் பணியில் துப்புறவு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது சாக்கடை குழாயை சுத்தம் செய்யும் போது மனிதனைவிட உயரமாக இருந்த எலியை பார்த்து அலறியுள்ளனர். பிறகு கூர்ந்து கவனிக்கும்போது அது ஒரு பொம்மை என்று தெரிய வந்துள்ளது. சாக்கடையிலிருந்து அதை வெளியே எடுத்துள்ளனர்.

முன்னதாக ஹாலோவின் பண்டிகை கொண்டாடப்பட்டபோது இந்த எலி பொம்மை உருவாக்கப்பட்டிருக்கலாம். பிறகு எப்படியோ மழை, வெள்ளம் போன்ற காரணங்களால் அடித்து வரப்பட்டு சாக்கடை குழாயில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சாக்கடையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள ராட்சத எலி பொம்மையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments