Publish Date: Tue, 04 May 2021 (14:16 IST)
Updated Date: Tue, 04 May 2021 (14:17 IST)
மெக்ஸிகோ நாட்டில் பாலம் இடிந்து விழுந்து ரயில் கவிழ்ந்ததில் ஏற்பட்ட விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர்.
மெக்சிகோ நாட்டில் மெட்ரோ ரயில் ஒன்று பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென பாலம் இடிந்து ரயில் விழுந்ததில் கீழே நின்ற கார்கள் மேல் ரயில் பெட்டிகள் விழுந்தது. இந்த கோரமான விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகவும், 75க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.