Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு : தற்கொலை செய்து கொண்ட நபர்

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (12:38 IST)
லாட்டரில் கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் தாய்லாந்து நாட்டில் நடந்துள்ளது.

 
தாய்லாந்து நாட்டில் வசித்து வந்தவர் ஜிராவத் பாங்பான்(42). ஏழையாக தனது வாழ்க்கையை ஓட்டி வந்த அவர் சமீபத்தில் ஒரு லாட்டரி சீட் ஒன்றை வாங்கியிருந்தார். அதிர்ஷ்டவசமாக அதில் அவருக்கு ரூ.8 கோடியே 50 லட்சம் பரிசு விழுந்தது. 
 
ஆனந்த அதிர்ச்சியில் திக்கு முக்காடிய அவருக்கு சோதனை காத்திருந்தது. ஆம்!. அவருடைய லாட்டரி சீட்டை காணவில்லை. வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அது கிடைக்கவில்லை. 
 
பரிசு விழுந்தும், லாட்டரி சீட் கிடைக்காமல் போனதால் மனமுடைந்த அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் இந்த விபரங்களை அவர் ஒரு கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
 
அவருடைய லாட்டரி சீட்டை யார் எடுத்து சென்றார்கள் எனத் தெரியவில்லை. பரிசுத் தொகை கேட்டு இதுவரைக்கும் யாரும் உரிமை கோரவும் இல்லை. இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments