Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீன கிராமத்தில் தனியாய் வாழும் மனிதர்: காரணம் என்ன?

சீன கிராமத்தில் தனியாய் வாழும் மனிதர்: காரணம் என்ன?
, வெள்ளி, 16 ஜூன் 2017 (12:17 IST)
சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் தனியாய் வாழ்ந்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சீனாவில் உள்ள ஜுயென்சாஷே என்ற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை தேடி வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
 
ஆனால் அந்த கிராமத்தில் லுய் ஷெங்ஜியா என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் எங்கும் செல்லாமல் தனியாக வசித்து வருகிறார். 
 
இவருடன் ஒரு நாயும், ஐந்து ஆடுகளும் உள்ளன. தனக்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வாங்கி கொள்கிறாராம் இந்த இளைஞர்.
 
இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லாம் தனியாய் இந்த கிராமத்தில் வாழ்ந்து வருவதாக அந்த இளைஞர் கூறுகிறார்.  

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறையில் சசிகலாவோடு வாக்குவாதம் செய்த தினகரன்!