Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லைக்ஸ் வராவிட்டால் 15-வது மாடியிலிருந்து குழந்தையை கீழே போட்டு விடுவேன்: மிரட்டிய நபர் கைது

Webdunia
புதன், 21 ஜூன் 2017 (05:54 IST)
ஃபேஸ்புக்கில் அடிமையாக உள்ள பலர் தாங்கள் போடும் பதிவிற்கு லைக் வராவிட்டால் டென்ஷன் ஆகிவிடுவதை பார்த்திருக்கின்றோம். ஆனால் அல்ஜீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் தான் போட்ட பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை எனில் ஐந்து மாத குழந்தையை 15வது மாடியில் இருந்து கிழே போட்டு கொன்றுவிடுவேன் என்று மிரட்டி ஒரு பதிவு போட்டுள்ளார்.



 


அல்ஜீரியா நாட்டிடில் அடுக்கு மாடிக் குடியிருப்பின் 15-ஆவது மாடியில் தங்கியிருக்கும் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவை பதிவு செய்துவிட்டு பின்னர் தனது பதிவிற்கு 1000 லைக்ஸ் வரவில்லை என்றால் குழந்தை கொன்றுவிடுவேன் என்று பதிவு செய்ததோடு ஜன்னல் வழியாக ஒரு குழந்தையை தூக்கிப்பிடித்தபடியான போட்டோவையும் பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவால் அதிர்ச்சி அடைந்த பலர் அவரது பதிவிற்கு லைக் போட்டனர். இந்நிலையில் இதுகுறித்து தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்த அல்ஜீரியா போலீசார் மிரட்டிய நபரை கைது செய்தனர். அவர் மீது குழந்தையின் பாதுகாப்புக்கு பாதிப்பு உண்டாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ராணுவ இணையதளத்தை ஹேக் செய்த பாகிஸ்தான்? - சைபர் தாக்குதலால் பரபரப்பு!

அம்பானி வீட்டை காப்பாற்ற தான் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டதா? கனிமொழி எம்.பி

ஹரியானாவுக்கு ஒரு சொட்டு நீர் கூட வழங்க முடியாது: பஞ்சாப் அரசு

2 நாட்களாக துரத்தி துரத்திக் கடித்த தெருநாய்! 10 பேரை கடித்ததால் பரபரப்பு! - பீதியில் மக்கள்!

அகமதாபாத்தில் ஒரு மினி வங்கதேசம்.. 4000 வீடுகள் இடிப்பு.. முக்கிய நபர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments