Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆண்டுகளாய் மகளை மிரட்டி உல்லாசம்; தந்தைக்கு 115 ஆண்டுகள் சிறை!!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2017 (14:48 IST)
மலேசியாவின் தன் மகளை 4 ஆண்டுகள் மிரட்டி கற்பழித்து வந்த நபருக்கு அந்நாட்டு அரசு 115 ஆண்டுக்கள் சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பை வெளியிடுள்ளது. மலேசியா நாட்டின் குவாந்தான் நகரில் வசித்து வந்துள்ளார் இந்த நபர். மீனவரான இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், இவர் கடந்த நான்கு வருடங்களாக தனது 20 வயது மூத்த மகளை மிரட்டி கற்பழித்து வந்துள்ளார்.
 
மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குவது தாய்க்கு தெரிந்து, கனவரின் மீதுள்ள பயத்தால் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். ஆனால், கடந்த மாதத்தில் இருந்து தனது இர்ண்டாவது மகளையும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார்.
 
தான்படும் துன்பத்தை தனது தங்கையும் அனுபவிக்க கூடாது எனவும் இது தனது அடுத்தடுத்த சகோதரிகளுக்கு தொடரக்கூடாது என்ற காரணத்தினால் வேறுவழியின்றி மூத்த மகள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். இதனை உடனடி வழக்காக கருதி காலம் தாழ்த்தாமல் மலேசிய நீதிமன்றம் தந்தை 115 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு.. ரூ.100 கோடி பணம் கேட்டு மிரட்டிய பெண் கைது..!

மேற்குவங்கத்தில் இன்னொரு மாணவர் மர்ம மரணம்.. ஐஐடி வளாகத்தில் சடலம் மீட்பு..!

மதுபான கொள்கை விவகாரம்: சத்தீஷ்கர் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் மகன் கைது..!

அசைவ உணவகங்களை வலுக்கட்டாயமாக மூடிய இந்து அமைப்புகள்.. உபியில் பெரும் பரபரப்பு..!

படுக்கை அறையில் இருந்து தப்பிக்க ரகசிய வழி.. ரூ.600 கோடி மோசடி செய்தவரை பொறி வைத்து பிடித்த போலீஸ்..!

அடுத்த கட்டுரையில்