Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் - மைத்ரிபால சிறிசேனா

நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் - மைத்ரிபால சிறிசேனா
, புதன், 24 ஜூன் 2015 (18:37 IST)
நாடாளுமன்றம் மிக விரைவில் கலைக்கப்படும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
 

 
நேற்று அமைச்சக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாடிய இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா, “நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்பட்டு விடும். அதன் பின்னர் அமைச்சக செயலாளர்களுக்கு மிக முக்கியமான காலகட்டமாக இருக்கும். அடுத்த அமைச்சரவையில், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக குறைக்கப்படும்.
 
அமைச்சக செயலாளர்கள் அதிகம் பணியாற்ற வேண்டியிருக்கும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அமைச்சர்களின் செயலாளர்களே எல்லா நிர்வாக நடவடிக்கைகளையும் முன்னெடுத்து செல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil