Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நிரவ்மோடி ஜாமீன் மனு தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி

நிரவ்மோடி ஜாமீன் மனு தள்ளுபடி: லண்டன் நீதிமன்றம் அதிரடி
, வெள்ளி, 29 மார்ச் 2019 (21:17 IST)
வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனில் கைதான வைர வியாபாரி நிரவ்மோடி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 26ஆம் தேதிக்கு இந்த வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது
 
நிரவ்மோடிக்கு ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சியங்களை கலைத்துவிடுவார் என இந்திய அதிகாரிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனுவை லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முன்னதாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் சட்டவிரோதமாக ரூ.13 ஆயிரத்து 500 கோடி பணபரிமாற்றம் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நீரவ்மோடி, இங்கிலாந்தில் இருப்பதை அறிந்து, அவரை நாடு கடத்திக்கொண்டு வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. 
 
webdunia
இந்த நிலையில் நீரவ் மோடி லண்டனில் கடந்த 19-ந்தேதி கைது செய்யப்பட்டு, 20-ந்தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் இறந்ததாக வதந்தி பரப்புகிறார்கள் - பிரபல நடிகர் வேதனை