Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

Prasanth Karthick
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:52 IST)

ஜெர்மனியை சேர்ந்த முதியவர் ஒருவர் நீருக்கடியில் 120 நாட்கள் உயிர் வாழ்ந்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

 

உலகம் முழுவதும் தகர்க்க முடியாத பல்வேறு சாதனைகளை செய்பவர்களுக்கு கின்னஸ் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அவ்வாறாக ஜெர்மனியை சேர்ந்த முதியவர் நீருக்கடியில் பல நாட்கள் வாழ்ந்த சாதனையை படைத்துள்ளார்.

 

ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான ருடிகர் கோச் என்பவர் இந்த சாதனையை படைக்க நீர்மூழ்கி கேப்சூல் ஒன்றில் நீருக்கடியில் வாழ்ந்துள்ளார். மெத்தை, தொலைக்காட்சி, கணினி, கழிவறை உள்ளிட்ட சகல வசதிகளும் கொண்ட அந்த கேப்சூலில் அவர் நீருக்குள் 120 நாட்கள் வாழ்ந்து நீருக்கடியில் நீண்ட நார்கள் உயிர் வாழ்ந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

 

முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் டூரி என்பவர் நீருக்கடியில் தொடர்ந்து 100 நாட்கள் உயிர் வாழ்ந்ததே கின்னஸ் சாதனையில் முதல் இடத்தில் இருந்த நிலையில் அதை ருடிகர் கோச் தற்போது முறியடித்துள்ளார்,

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து 18 ஆயிரம் இந்தியர்கள் வெளியேற்றம்? பிரதமர் மோடி - ட்ரம்ப் சந்திப்பில் என்ன நடக்கும்?

தனியார் வானிலை ஆர்வலர்கள் வானிலை கணிப்புகளை வெளியிடக்கூடாது: சென்னை வானிலை ஆய்வு மையம்

இரவு 11 முதல் காலை 11 மணி வரை சிறுவர்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

அம்மா உணவகங்களில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கலாமே? அண்ணாமலை யோசனை

கோடீஸ்வரர்களின் கடன் தள்ளுபடி தள்ளுபடியை தடுக்க சட்டம் வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவால்

அடுத்த கட்டுரையில்
Show comments