Webdunia - Bharat's app for daily news and videos

Install App

120 நாட்கள் நீருக்குள் வாழ்ந்த ‘கடல் ராசா நான்’! ஜெர்மனி முதியவர் கின்னஸ் சாதனை!

Prasanth Karthick
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:52 IST)

ஜெர்மனியை சேர்ந்த முதியவர் ஒருவர் நீருக்கடியில் 120 நாட்கள் உயிர் வாழ்ந்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

 

உலகம் முழுவதும் தகர்க்க முடியாத பல்வேறு சாதனைகளை செய்பவர்களுக்கு கின்னஸ் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அவ்வாறாக ஜெர்மனியை சேர்ந்த முதியவர் நீருக்கடியில் பல நாட்கள் வாழ்ந்த சாதனையை படைத்துள்ளார்.

 

ஜெர்மனியை சேர்ந்த 59 வயதான ருடிகர் கோச் என்பவர் இந்த சாதனையை படைக்க நீர்மூழ்கி கேப்சூல் ஒன்றில் நீருக்கடியில் வாழ்ந்துள்ளார். மெத்தை, தொலைக்காட்சி, கணினி, கழிவறை உள்ளிட்ட சகல வசதிகளும் கொண்ட அந்த கேப்சூலில் அவர் நீருக்குள் 120 நாட்கள் வாழ்ந்து நீருக்கடியில் நீண்ட நார்கள் உயிர் வாழ்ந்த நபர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

 

முன்னதாக அமெரிக்காவை சேர்ந்த ஜோசப் டூரி என்பவர் நீருக்கடியில் தொடர்ந்து 100 நாட்கள் உயிர் வாழ்ந்ததே கின்னஸ் சாதனையில் முதல் இடத்தில் இருந்த நிலையில் அதை ருடிகர் கோச் தற்போது முறியடித்துள்ளார்,

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனார் மீது பாலியல் குற்றச்சாட்டு.. புகார் அளித்த மருமகளின் திருமணத்தை ரத்து செய்த நீதிமன்றம்..!

கால்வாயில் பிணமாக கிடந்த மாடல் அழகி.. கழுத்தறுபட்டு இருந்ததால் அதிர்ச்சி.. காதலன் காரணமா?

விமான விபத்தில் தப்பித்தது எப்படி? விஸ்வாஸ் குமார் தப்பித்து வெளியேறிய வீடியோ வெளியானது!

இஸ்ரேல் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமா? அலறியடித்து மறுப்பு தெரிவித்த கவாஜா ஆசிப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments