Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிங்கங்களுக்கு நடைப்பெற்ற வினோத திருமணம்

சிங்கங்களுக்கு நடைப்பெற்ற வினோத திருமணம்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:04 IST)
வங்கதேசத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் இரண்டு சிங்கங்களுக்கு திருமணம் செய்து வைத்து விழா கொண்டாடியுள்ளனர். 


 

 
வங்கதேசத்தில் உள்ள சிட்டாகாங்க் வனஉயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு திருமணம் செய்து விழா கொண்டாடியுள்ளனர். இந்த விழா பூங்காவிற்கு பார்வையாளர்களை அதிகரிக்கும் நோக்கத்தில் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
 
‘நோவா’ என்ற பெண் சிங்கம் தனியாக வாழ்ந்து வந்ததால், அதற்கு துணையாக ரங்பூர் பூங்காவில் இருந்து பாட்ஷா என்ற ஆண் சிங்கத்தை அழைத்து வந்தனர். பாட்ஷாவின் வரவேற்பை கொண்டாடும் விதமாக சிட்டாகாங்க் பூங்காவில் திருமண நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 
திருமண விழாவில் 10 கிலோ இறைச்சி கேக், சிங்கம் தம்பதிகளுக்கு வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் 400 பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடக சட்டசபையில் தீர்மானம்!