Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகதிகளின் படகு விபத்தில் 45 சடலங்கள் மீட்பு

Advertiesment
அகதிகள்
, சனி, 28 மே 2016 (07:21 IST)
அகதிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் இதுவரை 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலி கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


 

 
லிபியா உள்பட சில நாடுகளில் நடந்துவரும் உள்நாட்டு போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் படகுகள் மூலம் இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், லிபியாவில் இருந்து இத்தாலிக்கு ஒரு படகில் மத்தியதரைக்கடலில் சென்றனர் லிபியா மக்கள்.
 
அந்த படகு லிபியா கடலில் இருந்து 35 நாட்டிக்கல் மைல் தூரம் சென்றதும் அதிகமான ஆட்கள் காரணமாக ஒரு பக்கமாக சாய்ந்தது கடலில் கவிழ்ந்து மூழ்கியது. 
 
இதனை ஸ்பெயின் நாட்டின் கடற்படை மற்றும் இத்தாலி கடற்படை கப்பல்கள் கவனித்து அந்த பகுதிக்கு விரைந்து சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இதுவரை சுமார் 135 பேரை கப்பல் படையினர் மீட்டுள்ளதாகவும், 45 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்களவைத் தலைவருக்கு ரூ. 48.25 லட்சம் சொகுசு கார்