Publish Date: Fri, 15 Nov 2019 (20:17 IST)
Updated Date: Fri, 15 Nov 2019 (20:24 IST)
இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களுக்குமே தனித்தன்மை உண்டு. அந்த வகையில்,பூனை மற்ற விலங்குகளைவிட மனிதர்களிடம் அதிகமாகப் பழகுகிறது. மனிதர்களும் செல்லமாக அதன் மீது உயிரையே வைத்ததுபோன்று வளர்க்கிறார்கள்.
அதனால் மற்ற விலங்குகளை காட்டிலும் மனிதர்களின் பெட்டில் கூட படுத்துத் தூங்கும் அளவுக்கு பூனைகள் சுதந்திரமக வீட்டில் உலாவுகிறது.
இந்நிலையில் ,வெளிநாட்டில், ஒரு பூனை அழகாக அமைதியாக மேஜையில் உட்கார்ந்து கொண்டு, டேபிள் விளக்குக்கு மேல் எரியும் மின்சார விளக்கினுள் தலையை விட்டு, அதன் வெப்பத்தில் குளிர்காயும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.