Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேங்க் கொடுத்த தொல்லை.. சொந்த பணத்தை கொள்ளையடித்த பெண்!

Webdunia
வியாழன், 15 செப்டம்பர் 2022 (16:10 IST)
வங்கியில் தன்னுடைய பணத்தை கொடுக்க அதிகாரிகள் மறுத்ததால் இளம்பெண் வங்கியை கொள்ளையடித்த சம்பவம் வைரலாகியுள்ளது.

கொள்ளை சம்பவங்கள் பல நாடுகளிலும் தொடர்ந்து வரும் நிலையில் வங்கிகளில் எப்போதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ள அந்தந்த நாடுகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் லெபனான் நாட்டில் நடந்த வங்கி கொள்ளை சம்பவம் ஒன்று மக்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

லெபனானை சேர்ந்த சலி ஹஃபிஸ் என்ற பெண் தனது மாத ஊதியத்தை வங்கியில் செலுத்தி சேமித்து வைத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரது சகோதரிக்கு கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ALSO READ: தண்ணீர் குடித்த தலித் இளைஞருக்கு அடி, உதை..! – ராஜஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்!

இதனால் தனது சகோதரியின் சிகிச்சைக்காக வங்கியில் இருந்து சேமிப்பு பணத்தை எடுக்க சென்றுள்ளார் ஹஃபிஸ். ஆனால் வங்கி அதிகாரிகள் ஒரு மாதத்திற்கு 200 டாலர்கள் மட்டுமே எடுக்க முடியும் என கூறியுள்ளனர். தனது நிலையை அந்த பெண் எடுத்துக்கூறியும் அவர்கள் காதில் வாங்கவில்லை என தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அந்த பெண் பொம்மை துப்பாக்கி ஒன்றை எடுத்துக் கொண்டு வங்கிக்கு சென்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் 13 ஆயிரம் டாலர்களை அவர் கொள்ளையடித்த போது போலீஸில் பிடிபட்டார். விசாரணையில் தனது சேமிப்பு தொகை வங்கியில் இருப்பதையும், அதை வங்கி அதிகாரிகள் தர மறுத்ததால் கொள்ளையடித்ததாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments