Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குவைத் தீ விபத்து.! பலியான 40 பேரும் இந்தியர்கள்.! அதிர்ச்சி தகவல்...!

Senthil Velan
புதன், 12 ஜூன் 2024 (17:06 IST)
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்  தீ விபத்து ஏற்பட்டது. தீ குடியிருப்பு முழுவதும் பரவியதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். இருப்பினும் தீ விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.
 
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி சித்தியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது.
 
இந்நிலையில் தீ விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 பேர் இந்தியர்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கு இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.

ALSO READ: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அகிலேஷ் யாதவ்..! உ.பி. அரசியலில் பரபரப்பு..!!
 
குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

12 வயது மகளுக்கு பாலியல் வன்கொடுமை.! கல்லால் அடித்துக் கொன்ற தந்தை கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments