Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா! – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. பல மக்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது. யாரும் மாஸ்க் அணிவதில்லை. எல்லாரும் நல்ல நிலையில் உள்ளார்கள். கோவிட் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments