Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்த 2 பேர் பலி: அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (08:02 IST)
சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும் போது தவறி விழுந்த 2 வாலிபர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையை அடுத்த குன்றத்தூர் என்ற பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற 20 வயது நபர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் தனது நண்பர் ரிச்சர்ட் என்பவருடன் சேர்ந்து நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க சென்றார்
 
அந்த ஏரியை சுற்றி பார்த்து விட்டு இருவரும் மதகில் ஏறி நின்றபடி செல்பி எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஏரிக்குள் விழுந்துவிட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் 
 
இதனையடுத்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து இருவரையும் உடல்களை மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஆபத்தான இடங்களில் செல்பி எடுக்க கூடாது என பலமுறை வலியுறுத்தியும் இந்த இளைஞர்கள் செல்ஃபியால் தங்கள் விலைமதிப்பில்லா உயிரை இழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments