Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 19 April 2025
webdunia

அமெரிக்காவில் முடிவுக்கு வந்தது கொரோனா! – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

Advertiesment
Jo Biden
, திங்கள், 19 செப்டம்பர் 2022 (09:18 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வந்ததாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி வாக்கில் பரவத் தொடங்கிய கொரோனா பல கோடி மக்களை பாதித்தது. பல மக்கள் உயிரிழந்தனர். ஊரடங்கு, பொதுமுடக்கத்தால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது பல நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தாலும் தொடர்ந்து பாதிப்புகள் இருந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது பேசியுள்ள அதிபர் ஜோ பைடன் “அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு முடிவுக்கு வந்துவிட்டது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகளை சரி செய்ய தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். ஆனால் தொற்றுநோய் முடிந்துவிட்டது. யாரும் மாஸ்க் அணிவதில்லை. எல்லாரும் நல்ல நிலையில் உள்ளார்கள். கோவிட் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செம்பரம்பாக்கம் ஏரியில் செல்பி எடுக்கும்போது தவறி விழுந்த 2 பேர் பலி: அதிர்ச்சி சம்பவம்