Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா; அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் உத்தரவு!

உக்ரைனை சுற்றி வளைக்கும் ரஷ்யா; அமெரிக்கர்கள் வெளியேற ஜோ பைடன் உத்தரவு!
, திங்கள், 24 ஜனவரி 2022 (15:49 IST)
உக்ரைனை ரஷ்யாவின் ராணுவம் சுற்றி வளைக்கும் நிலையில் அங்குள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களை உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அரசை அமைக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. இதனால் உக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்கள் குடும்பங்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் உலக நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இன்று ரிசல்ட் வராது !