Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேயாவது.. பிசாசாவது..! ஜப்பான் பிரதமர் செய்த செயல்! – மிரண்டு போன மக்கள்!

பேயாவது.. பிசாசாவது..! ஜப்பான் பிரதமர் செய்த செயல்! – மிரண்டு போன மக்கள்!
, செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:33 IST)
ஜப்பானில் பேய் இருப்பதாக நம்பப்படும் பழைய பிரதமர் இல்லத்தில் தற்போதைய ஜப்பான் பிரதமர் ஒரு இரவை கழித்துள்ளது வைரலாகியுள்ளது.

ஜப்பானில் கடந்த 1963ம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடந்தபோது டோக்கியோவில் உள்ள அரசின் பிரதமர் இல்லத்திற்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பாதுகாப்பு வீரர்கள், மந்திரி உள்ளிட்ட பலரை சுட்டுக் கொன்றனர். அதுமுதலாக அவர்களது ஆவி அந்த வீட்டிலேயே சுற்றி திரிவதாக ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.

அதனால் இதுவரை பதவியேற்ற எந்த ஜப்பான் பிரதமரும் அதிகாரப்பூர்வமான அந்த பிரதமர் இல்லத்தில் தங்கியது இல்லை. இந்நிலையில், புதிதாக பதவியேற்ற புமியோ கிஷிடோ பலரது அறிவுரைகளையும் மீறி அந்த வீட்டில் சென்று தங்கியுள்ளார். அங்கு ஒருநாள் இரவை கழித்த பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் “நேற்று இரவு நான் நன்றாக தூங்கினேன். அங்கு எந்த பேய், பிசாசையும் நான் பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்தாண்டுக்கு கடற்கரை செல்ல தடை; ஊரடங்கு நீட்டிப்பு! – முதல்வர் அதிரடி அறிவிப்பு!