Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரி செலுத்தவில்லை என குற்றச்சாட்டு.. துணை நிதி அமைச்சர் ராஜினாமா..!

Webdunia
திங்கள், 13 நவம்பர் 2023 (15:02 IST)
தனது நிறுவனத்திற்கு வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து துணை நிதி அமைச்சர் என்ற பதவியை ராஜினாமா செய்துள்ள தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜப்பானில் நடைபெற்று உள்ளது.
 
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த துணை நிதி அமைச்சர் கென்ஜி காண்டா என்பவர் தனது நிறுவனத்திற்கு சரியாக வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் உடனே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ஜப்பான் பிரதமருக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

கடந்த 2013 முதல் 2022 ஆம் வரையில் ஆன காலத்தில் துணை நிதி அமைச்சர் ஆக இருந்த கென்ஜி நிறுவனத்திற்கு  சொந்தமான நிலம் மற்றும் சொத்துகளுக்கு சரியான வரி செலுத்தவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட துணை நிதி அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  தேசிய அரசியல் விவகாரங்களில் நான் பிஸியாகிவிட்டதால் வரி செலுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments