Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பான் மீது போர் தொடங்கும் வடகொரியா? – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:45 IST)
ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வடகொரியா முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை பாலிஸ்டிக் உள்ளிட்ட அபாயகரமான ஏவுகணைகளை சோதனை நடத்தியுள்ளது. இதனால் அண்டை நாடான ஜப்பான் மீது வடகொரியா போர் தொடுக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்புகளுக்கிடையே ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் அபாயம் காரணமாக ஜப்பானில் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments