Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி ரயில்கள் மின்னல் வேகம் தான்: இந்திய ரயில்வே அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 4 அக்டோபர் 2022 (16:35 IST)
அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
 
இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே  பயணிகள் பயணம் செய்கின்றனர். இந்நிலையில், இந்த ஆண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது.
 
இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் வரை  உயர்த்தப்பட்டுள்ளது என்றும், இதனால் பயண நேரம் குறையும் என்றும் இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
 
எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடப்பாண்டில் 84 சதவீதம் குறித்த நேரத்திற்குள் இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில்  75 சதவீதம் சரியான நேரத்தில் இயக்கப்பட்டதாகவும், இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments