Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க மண்ணில் கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் ஜெய்சங்கர்.. உலக நாடுகள் ஆச்சரியம்..!

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (11:58 IST)
இந்தியா கனடா இடையே கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க மண்ணில் வைத்து  மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கனடா மீது கடுமையான விமர்சனத்தை வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
 அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் காலிஸ்தான் போராட்டம் என்பது அவர்கள் சுதந்திரம், அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி தர வேண்டும் என்று கனடா பிரதமர் பேசி இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும்  இந்தியா உள்பட ஆசிய நாடுகள் வளர்வதை அவர்கள் விரும்பவில்லை என்பதை இந்த பேச்சு காட்டுகிறது என்றும் தெரிவித்தார்.  
 
மேற்குலக நாடுகள் பல விஷயங்களில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்து வருகிறது என்று  பேசிய ஜெய்சங்கர் அமெரிக்காவையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
 
அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பேச்சை கனடா மற்றும் அமெரிக்கா எதிர்பார்க்காத நிலையில் உலக தலைவர்கள் இந்தியாவை ஆச்சரியமாக பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மக்களே! 17 வருடம் கழித்து மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பேருந்துகள்!

தேஜஸ்வி யாதவை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.யின் மனைவிக்கும் இரட்டை வாக்காளர் அட்டை!

ஆணுறுப்பு சிதைக்கப்பட்டு அணையில் வீசப்பட்ட பிணம்.. 14 பேர் கைது..!

கள்ளக்காதலை விட்டுவிட கெஞ்சிய கணவர்.. மனைவி மறுப்பு.. அதன்பின் நடந்த விபரீதம்..!

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவோம்.. டிரம்ப் மிரட்டலுக்கு பயப்படாத இந்தியா.. அதிர்ச்சியில் அமெரிக்கா..!

அடுத்த கட்டுரையில்
Show comments