Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசா மருத்துவமனை மீது குண்டு வீசிய இஸ்ரேல்? 500 பேர் பலி

Webdunia
புதன், 18 அக்டோபர் 2023 (07:57 IST)
காசாவில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் குண்டு வீசியதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் என 500 பேர் பலியாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத குழுக்களுக்கு இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்பட்டிருந்தாலும் பாலஸ்தீனம் தரப்பில் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று திடீரென காசாவில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது இஸ்ரேல் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதில் 500 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனை மீது ஏவுகணை வீசி விட்டதாக இஸ்ரேல் மீது ஹமாஸ் குற்றச்சாட்டு எழுப்பிய நிலையில் பாலஸ்தீனத்தின் ஏவுகணைகள் தான் தவறுதலாக மருத்துவமனை மீது விழுந்திருக்கும் என்றும் நாங்கள் மருத்துவமனை மீது ஏவுகணை வீசவில்லை என்றும் இஸ்ரேல் பதில் அளித்துள்ளது

Edited by siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டக்கல்லூரி மாணவி கைது.. மம்தா பானர்ஜி - பவன் கல்யாண் ஆவேசமான வாக்குவாதம்..!

விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தால் அது இன்னொரு மக்கள் நல கூட்டணி தான்: மணி

கல்லூரி மாணவியுடன் உதவி பேராசிரியர் நெருக்கம்.. வீடியோ எடுத்து மிரட்டியதாக புகார்.

“ஒரு சாம்பார் கூட வைக்க தெரியாதா?” கணவன் திட்டியதால் மனைவி எடுத்த சோக முடிவு!

முக அழகிரி வீட்டிற்கு சென்ற முதல்வர் ஸ்டாலின்.. வாசலுக்கு வந்து வரவேற்பு அளித்த குடும்பத்தினர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments