Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்! ஹமாஸ் முக்கிய தளபதிகள் பலி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (11:12 IST)
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படையினரின் முக்கிய தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் புகுந்து தாக்கியதை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு பதுங்கியுள்ள காசா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலும் தொடங்கியுள்ளது. தற்போது நடந்து வரும் ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 6 கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸின் முக்கியமான 2 படைப்பிரிவின் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டார்ஜ் தபா படைப்பிரிவின் கமாண்டர் ரபத் அப்பாஸ் மற்றும் போர் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் விமான வழி தாக்குதலில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஹமாஸ் படையினர் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments