Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்! ஹமாஸ் முக்கிய தளபதிகள் பலி!

Webdunia
வெள்ளி, 27 அக்டோபர் 2023 (11:12 IST)
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் படையினரின் முக்கிய தளபதிகள் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.



இஸ்ரேல் – பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே போர் வெடித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஹமாஸ் புகுந்து தாக்கியதை தொடர்ந்து தற்போது இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு பதுங்கியுள்ள காசா பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.

முன்னதாக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில் தற்போது தரை வழி தாக்குதலும் தொடங்கியுள்ளது. தற்போது நடந்து வரும் ஏவுகணை தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் 6 கமாண்டர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும் ஹமாஸின் முக்கியமான 2 படைப்பிரிவின் தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

டார்ஜ் தபா படைப்பிரிவின் கமாண்டர் ரபத் அப்பாஸ் மற்றும் போர் நிர்வாக உதவி தளபதி தரேக் மரூப் ஆகியோர் விமான வழி தாக்குதலில் பலியானதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஹமாஸ் படையினர் பின்னடைவை சந்திக்கலாம் என கூறப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments