இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக செய்திகள் வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே மீண்டும் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரும் நிலையில், இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். ஆனால் அப்படி எதுவும் முடிவு செய்யவில்லை என ஈரான் மறுத்தது. ஆனால் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அமெரிக்காவில் போர் நிறுத்த சமரசத்திற்கு உடன்படுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரானும் போரை நிறுத்திக் கொள்வதாக தகவல்கள் வெளியானது. ஆனால் ஈரான் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காததுடன், ட்ரம்ப் முன்மொழிந்த சமரத்திற்கு உடன்படுகிறதா என்பது குறித்தும் ஏதும் சொல்லவில்லை.
இந்நிலையில் தற்போது இஸ்ரேலில் சில இடங்களில் ஏவுகணை தாக்குதல் சத்தங்கள் கேட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதற்காக தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள ஆட்சி இலக்குகள் மீது சக்தி வாய்ந்த தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போர் நிறுத்தம் அறிவித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே போர் பதற்றம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K