Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆறுகளில் ரத்த வெள்ளம்: அச்சுறுத்தலில் சீனா!!

ஆறுகளில் ரத்த வெள்ளம்: அச்சுறுத்தலில் சீனா!!
, வெள்ளி, 3 மார்ச் 2017 (11:30 IST)
சீன ஆறுகளில் ரத்த வெள்ளம் ஓடும் என்று ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி வீடியோ மூலம் எச்சரித்துள்ளார். 


 
 
சீனாவின் மேற்கு பகுதியான ஜிங்ஜியங்கில் உய்குர் முஸ்லீம்கள் தான் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் அரசுக்கும் இடையே பல காலமாக போராட்டமாக உள்ளது. 
 
இதற்கிடையே சீனாவில் வசிக்கும் உய்குர் முஸ்லீம்களில் பலர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் சீனர்களை எதிர்த்து போராடுவோம் என உய்குர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாக்குறுதி அளித்துள்ளனர். 
 
மேலும், பாக்தாதி வெளியிட்டுள்ள வீடியோவில் ஈராக்கில் உய்குர் முஸ்லீம்கள் பயிற்சி பெறும் காட்சிகள் உள்ளன. ஹான் சீனர்களுடனான மோதலில் கொல்லப்பட்ட உய்குர் முஸ்லீம்களுக்கு பழிவாங்குவது போன்று இந்த பயிற்சி உள்ளது. மேலும் அந்த வீடியோவில் சீன கொடியை எரிக்கும் காட்சியும் உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வீடியோ : இந்திய பெண் மீது இனவெறி தாக்குதல் - அமெரிக்காவில் அதிர்ச்சி