Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவில் இருந்து தப்பிக்க லாக் அவுட் ஒரு தீர்வா? WHO பதில்!!

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (11:22 IST)
லாக் அவுட் செய்வதால் மட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடுமா என WHO பதில் அளித்துள்ளது. 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வந்தாலும் இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஆனால், தற்போது படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்துள்ளது. அடுவும் ஒரே நாளில் 19 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது என்பது கூடுதல் தகவல். 
 
இந்நிலையில் மத்திய அரசு சில நகரங்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படி லாக் அவுட் செய்வதால் மட்டும் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடுமா என WHO பதில் அளித்துள்ளது. 
 
கொரோனா வைரஸில் இருந்து தப்புவதற்கு முழு அடைப்புகள் மட்டும் உதவாது. இது ஒரு தற்காலிக தீர்வு தான். வலிமையான சுகாதார தீர்வுகளை கொண்டுவர வேண்டும். லாக் அவுட் காலம் முடிந்துவிட்டால் மக்கள் மீண்டும் ஒன்று திரளும் போது நோய் வேகமாக பரவக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments