Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்கள்.. என்ன காரணம்?

Mahendran
திங்கள், 20 மே 2024 (14:17 IST)
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹீம் ரைசி நேற்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த நிலையில் அவர் பயணம் செய்த ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து துணை அதிபர் முகமது முக்தர் இன்று அதிபராக பதவியேற்று கொள்ள உள்ளார் 
 
இந்த நிலையில் ஈரான் நாட்டின் அதிபர் மரணத்தை அந்நாட்டு பெண்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளதாக கூறப்படும் நிலையில் இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது 
 
ஈரான் நாட்டு அதிபர் சர்வாதிகாரி போலவும் பழமைவாதியாகவும் நடந்து கொண்டார் என்றும் அவரது மரணத்திற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்க மாட்டோம் என்றும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஈரான் நாட்டின் பெண்களுக்காக பல உரிமைகள் இப்ராஹீம் ஆட்சியில் பறிக்கப்பட்டதாகவும் பட்டாசு வெடித்து கொண்டாடும் பெண்களில் சிலர் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments