Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல் – ஈரானில் பதற்றம்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (13:33 IST)
ஈரான் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ஏவுகணை திசை மாறியதால் போர் கப்பல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்போது ஒரு போர்க்கப்பல் ஏவுகணை ஒன்றை தண்ணீருக்கு அடியில் இலக்கு நிர்ணயித்து ஏவ முயற்சித்துள்ளது. அப்போது ஏற்பட்ட குளறுபடிகளால் நீண்ட தொலைவு கடந்து செல்ல வேண்டிய ஏவுகணை குறுகிய எல்லைக்குள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இலக்கில் கொனராக் எனப்படும் மற்றொரு ஈரான் போர் கப்பலும் பயிற்சியில் இருந்த நிலையில் தவறுதலாக ஏவுகணை கொனராக் கப்பலை தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் சேதத்தை சந்தித்த கொனராக் கப்பல் மெல்ல கடலில் மூழ்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments