Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திசைமாறிய ஏவுகணை! வெடித்து சிதறிய போர் கப்பல் – ஈரானில் பதற்றம்!

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (13:33 IST)
ஈரான் போர்க்கப்பல்கள் ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயம் ஏவுகணை திசை மாறியதால் போர் கப்பல் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் போர் கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. அப்போது ஒரு போர்க்கப்பல் ஏவுகணை ஒன்றை தண்ணீருக்கு அடியில் இலக்கு நிர்ணயித்து ஏவ முயற்சித்துள்ளது. அப்போது ஏற்பட்ட குளறுபடிகளால் நீண்ட தொலைவு கடந்து செல்ல வேண்டிய ஏவுகணை குறுகிய எல்லைக்குள் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது இலக்கில் கொனராக் எனப்படும் மற்றொரு ஈரான் போர் கப்பலும் பயிற்சியில் இருந்த நிலையில் தவறுதலாக ஏவுகணை கொனராக் கப்பலை தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட வெடி விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் சேதத்தை சந்தித்த கொனராக் கப்பல் மெல்ல கடலில் மூழ்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments