Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

Siva
ஞாயிறு, 6 ஜூலை 2025 (10:25 IST)
இஸ்ரேலுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, நேற்று தெஹ்ரானில் நடந்த ஒரு மத சடங்கில் பங்கேற்க மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பொதுவெளியில் தோன்றினார்.
 
இஸ்ரேலுடன் நடந்த 12 நாள் போரில், ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள் மற்றும் அணுசக்தி வல்லுநர்கள் பலர் கொல்லப்பட்டனர். போரின் ஆரம்ப நாட்களில் காமெனி ஒரு பாதுகாப்பான இடத்தில் மறைந்திருந்ததாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அவர் பொதுவெளியில் தோன்றியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 
ஈரானின் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்ட காட்சிகளில், காமெனி ஒரு மண்டபத்திற்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த மண்டபத்தில், ஷியா முஸ்லிம் நாட்காட்டியின் மிக முக்கியமான நாளான அஷுராவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய கூட்டம் கூடியிருந்தது. இந்த கூட்டத்தில் காமெனி கலந்து கொண்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உன் கணவன் விந்தில் விஷம் இருக்கு.. என்னோடு உடலுறவு கொண்டால்?! - மதபோதகரின் சில்மிஷ முயற்சி!

பல மாதங்களுக்கு பின் பொதுவெளிக்கு வந்த காமெனி.. கொல்லப்பட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி..!

பாமக நிர்வாக குழுவிலிருந்து அன்புமணி நீக்கம்! ட்விஸ்ட் வைத்த ராமதாஸ்! - அன்புமணி அடுத்த மூவ் என்ன?

காதலிக்க மறுத்த ஆசிரியை! கொன்று தாலிக் கட்டி செல்ஃபி எடுத்த கொடூரன்!

11.50 லட்சம் சாதாரண மீட்டர்கள் வாங்கும் பணியை மின் வாரியம்.. ஸ்மார்ட் மீட்டர் திட்டம் என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments