Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுடனான ஒப்பந்தங்களை ரத்து செய்த ஈரான்! – சீனா தூண்டுதல் காரணமா?

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (08:50 IST)
சமீபத்தில் சீன செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், இந்தியாவுடனான ஒப்பந்தத்தை ஈரான் ரத்து செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் துறைமுக சபஹாரிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை ரயில்வே பாதை அமைக்க இந்தியாவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்திருந்தது. 2016ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளாக இந்த திட்டத்திற்கான எந்த நிதியையும் இந்தியா வழங்கவில்லை என கூறி இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது ஈரான்.

அதேசமயம் சீனாவுடன் 30 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஒப்பந்தத்தை ஈரான் மேற்கொண்டுள்ளது. இலங்கையிலும், இந்தியாவுடனான கொழும்பு துறைமுக திட்டத்தை மறுபரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இரு நாடுகளும் சீனாவுடன் பொருளாதார உறவில் நெருக்கத்தில் உள்ளவை என்பதால் சீனாவின் தூண்டுதல் பேரில் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படுகின்றனவா என உலக அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments