Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தோனேசிய விமான விபத்து: 189 பேர் பரிதாப பலி

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (08:01 IST)
இந்தோனேஷியா ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 189 பேரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்தோனேசியா ஜகார்த்தாவில் இருந்து நேற்று காலை 6.20 மணிக்கு லயன் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 பயணிகள் விமானம் 6 பணிப்பெண்கள், 2 விமான ஓட்டிகளுடன் சேர்த்து 189 பேருடன் பங்கல் பினாங் தீவுக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் புறப்பட்ட 13வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
 
இதனையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு அதற்காக வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. சற்று நேரத்தில் விமானம் பெரும் விபத்துக்குளாகி விமானத்தின்  பாகங்கள் ஜாவா கடற்கரையில் மிதப்பதாக தகவல்கள் வெளியாகினது.

விபத்துள்ளானவர்களை தேடும் பணி நடைபெற்று வந்தது. அவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என மீட்புப் படையினர் சொல்லி வந்த நிலையில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments