Publish Date: Wed, 02 Mar 2022 (18:45 IST)
Updated Date: Wed, 02 Mar 2022 (18:48 IST)
பேருந்து மட்டும் ரயில் கிடைக்கவில்லை என்றால் நடந்தே உடனடியாக உக்ரைன் நாட்டிலிருந்து வெளியேருங்கள் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக உக்ரைன் நாட்டின் மீது கடும் தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா தற்போது கார்கிவ் நகரில் நெருங்கிவிட்டது. கார்கிவ் நகரை சுற்றி வளைத்து தாக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கார்கிவ் நகரில் உள்ள இந்தியர்களின் பேருந்து ரயில் வசதி இல்லை என்றாலும் கூட அந்நகரில் இருந்து நடந்தே வெளியேறுங்கள் இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு எச்சரித்து உள்ளது இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது